சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
Nov 20 2019 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெல்கிரேன் நாட்டில் நடைபெற்ற 13-வது சர்வதேச கராத்தே போட்டியில், 18 நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியா சார்பாக 6 தமிழக வீரர்கள் உட்பட 8 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றனர். நாடு திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பதக்கம் வென்ற வீராங்கனைகள், பெண்கள் அச்சப்படாமல் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றனர்.