கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அஞ்சினேன் : மன அழுத்தம் குறித்து இந்தியக் கேப்டன் விராட் கோலி பகிரங்கம்
Nov 14 2019 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மன அழுத்தத்தால் தானும் பாதிக்கப்பட்டதாக பகிரங்கமாக தெரிவித்துள்ள இந்தியக் கேப்டன் விராட் கோலி, மன அழுத்தம் குறித்து பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று, தெரிவித்திருக்கிறார்.
பங்களாதேஷ் அணி உடனான டெஸ்ட் போட்டி குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தபோது, மன அழுத்தப் பிரச்னையால் தானும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். அப்போது இருந்த மனநிலையில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாக அஞ்சியதாகவும், அவர் குறிப்பிட்டார். மன உளைச்சல் சம்பந்தமான பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு அறிவித்திருக்கும் மேக்ஸ்வெலுக்கு, தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.