ஆஸ்திரேலியாவில் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று, சென்னை திரும்பிய விக்னேஷ் ஹரிகரனுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு
Nov 11 2019 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியா நாட்டில் நடந்த சர்வதேச கெட்டில் பெல் போட்டியில், இந்தியா உட்பட 7 நாடுகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஹரிகரன், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். இந்நிலையில், சென்னை வந்த விக்னேஷ் ஹரிகரனுக்கு விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யாவின் தேசிய விளையாட்டான கெட்டில் பெல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கெட்டில் பெல் விளையாட்டுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.