ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம் - அவரை தனியாக விட்டு விடுங்கள் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா வேண்டுகோள்

Nov 10 2019 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம் என்றும், அவரை தனியாக விட்டு விடுங்கள் என்றும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தவறான ரிவ்யூ எடுக்க வலியுறுத்தி, அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதேபோல், இரண்டாவது டி20 போட்டியில், ஸ்டம்புக்கு முன்னால் பந்தைப் பிடித்து, ஸ்டம்பிங் செய்ததும், விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அனைவரும் ரிஷப் பந்தை பற்றியே விமர்சிக்கின்றனர் என்றும், களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ரிஷப் பந்த் மீதான பார்வையை விலக்கிக் கொள்ளுங்கள் என்றும், அவர் மீதான பார்வையை விலக்கினால், இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00