பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி, குஜராத் மாநிலம், ராஜகோட்டில் நாளை நடைபெறுகிறது
Nov 6 2019 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் சர்வதேச டி20 போட்டியில், இந்திய அணியை பங்களாதேஷ் அணி முதன்முறையாக வீழ்த்தியது.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில், நாளை இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க, இந்திய அணி தயாராக உள்ளது. இந்திய அணியை வீழ்த்தி, தொடரை வெல்லும் முனைப்பில் பங்களாதேஷ் அணி உள்ளது.