திருச்சியில் 6 வயது சிறுவன் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உலக சாதனை
Nov 4 2019 9:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், 6 வயது சிறுவன், பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டி, உலக சாதனை படைத்துள்ளான்.
திருச்சியில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சஜூவா என்ற சிறுவனின் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது. முதலாவதாக 40 வினாடிகளில் 5 கணக்குகளை முடித்து உலக சாதனை படைக்கப்பட்டது. இரண்டாவதாக உலக தலைவர்களான பிடல் காஸ்ட்ரோ, சாக்ரடீஸ் மற்றும் விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன், திருவள்ளுவர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி 4 நிமிடம் 36 வினாடிகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி உலக சாதனை நிகழ்த்தினார். சிறுவனின் சாதனைகளை, சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், ஜெட்லீ புக் ஆப் வேர்ல்டு ரெகார்ட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, சாதனை சிறுவனுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறுவனின் பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.