இந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்க்ளாதேஷ் அணி வெற்றி
Nov 4 2019 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பங்க்ளாதேஷ் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான, முதல் டி20 கிரிக்கெட் போட்டி, டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்க்ளாதேஷ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். அதில் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை, அவர் நிகழ்த்தினார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய பங்க்ளாதேஷ் அணி, முஷிபூர் ரஹிமின் அதிரடி ஆட்டத்தால், 19.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பங்க்ளாதேஷ் அணி முன்னிலையில் உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி, வரும் 7-ம் தேதி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.