2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஹாக்கி போட்டிற்கு இந்திய அணிகள் தகுதி - ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அசத்தல்
Nov 3 2019 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஹாக்கி போட்டிற்கு, இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
டோக்கியோவில் நடைபெறும் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில், இந்தியா - ரஷியா அணிகள் மோதின. இந்த போட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
இதனால் ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணி 7 - 1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியது. இரண்டு லீக் ஆட்டங்களிலும் பெற்ற ஒட்டுமொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில் இந்தியா 11 - 3 என அதிக கோல்கள் பெற்றது. இதன் மூலம், அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றது.
இதே போல், மகளிருக்கான பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில், இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்க வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில், இந்தியாவை 4 - 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது. எனினும், ஒட்டுமொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில், 6 - 5 என இந்தியா முன்னிலை பெற்றது. இதன் மூலம், 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.