பெரம்பலூரில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
Oct 31 2019 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர். முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் கேரம் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.