ஃப்ரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம் - ஆண்கள் இரட்டையர் பிரிவில் சத்விக், சிராக் இணை காலிறுதியில் நுழைந்தது
Oct 25 2019 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸில் நடைபெற்று வரும் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதி ஆட்டத்திற்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஃப்ரெஞ்ச ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றுப்போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் மோதினர். முதல் செட்டை 21-0 எனக் கைப்பற்றிய சாய்னா, 2வது செட்டை 21-11 என தன்வசப்படுத்தினார். இதன் மூலம் 21-0, 21-11 என டென்மார்க் வீராங்கனையை நேர் செட்டுகளில் வீழ்த்தினார். காலிறுதிப் போட்டியில் தென்கொரியாவின் ஆன் சே யங்குடன் சாய்னா நேவால் மோதவுள்ளார்.
இதேபோல், மற்றொரு 2-வது சுற்றுப் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, சிங்கப்பூரின் Jia Min-ஐ எதிர்கொண்டார். இதில் அபாரமாக விளையாடிய சிந்து, 21-10, 21-13 என சிங்கப்பூர் வீராங்கனையை நேர் செட்டுகளில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்றில், இந்தியாவின் சத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை, 21-18, 18-21, 21-13 என இந்தோனேஷியாவின் முகமது அக்சன், ஹென்டிரா செடியாவன் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.