உலகளவில் நடைபெறும் அதிவேக சோலார் கார் பந்தயம் : 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்பு
Oct 14 2019 9:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில், 24 நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டில் நடைபெற்ற அதிவேக சோலார் கார் பந்தயத்தில் சூரிய ஒளியை பயன்படுத்தி மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கார்கள் பங்கேற்றன.
டார்வினில் இருந்து புறப்பட்ட முன்னணி அணியான டச் சோலார் ரேசிங் அணி, முதல் நாள் போட்டியில் முன்னிலை பெற்றது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலையை அடைந்த அணிகள் ஆஸ்திரேலியா வழியாக ஸ்வீடனையும், நெதர்லாந்து மற்றும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவையும் அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் தினமும் மாலை ஐந்து மணிக்குள் அவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. முதல் நாள் முடிவில், சோலார் டீம் டிவெண்டி முன்னிலை வகித்த நிலையில், முன்னணி அணிகளான டச், பெல்ஜியன்ஸ் அகோரியா சோலார், வாட்டன்ஃபால் அணிகள் வெளியேறின.