உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
Sep 17 2019 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
18-வது உலக கோப்பை கூடைப்பந்து திருவிழா சீனாவில், கடந்த 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்கா, காலிறுதியுடன் வெளியேறியது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை வீழ்த்தி, 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.