கங்கை நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : ஜல்சக்தி சார்பில் நடத்தப்பட்ட மாரத்தானில் சுமார் 20,000 பேர் பங்கேற்பு
Sep 15 2019 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கங்கை நதி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் டெல்லியில் நடைபெற்றது.
'Great Ganga Run' எனப்படும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் தொடங்கியது. ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை, ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷேகாவத், இணையமைச்சர் திரு.ரத்தன் லால் கட்டாரியா மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கங்கை நதி நம் நாட்டிற்கு மிகவும் அவசியமானது என்றும், கங்கை நதி பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.