ஹரியானாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் துணை வேந்தராக நியமனம்
Sep 15 2019 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹரியானா மாநிலம் ராய் விளையாட்டு பல்கலைகழகத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில், விளையாட்டு பல்கலைகழகம் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சோனாபேட் பகுதியில் ராய் விளையாட்டு பல்கலைகழகம் என்ற பெயரில், இப்பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் முதல் விளையாட்டு பல்கலைகழகத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1983-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில், கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.