மூன்று தலைமுறையினராக கபடி வீரர்களை உருவாக்கி வரும் ஏனாதி கிராமம் - உடல் தகுதி காரணமாக ராணுவம், காவல்துறை பணியில் எளிதாக இடம்பிடிப்பு

Sep 14 2019 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிரிக்கெட் உள்ளிட்ட பிற விளையாட்டுகள் மீது இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ள நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமம் தேசிய, மாநில அளவிலான கபடி வீரர்களை உருவாக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கபடியை பிரதான விளையாட்டாக இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். மூன்று தலைமுறைகளாக கபடி வீரர்களை இந்த கிராமம் உருவாக்கி வருகிறது, கோவில் திருவிழா, தீபாவளி, பொங்கல் போன்ற விழா காலங்களில் கபடி விளையாடி தங்களின் திறமையை காட்டுவதை இக்கிராம இளைஞர்கள் தங்களின் கவுரவமாக கருதுகின்றனர். சிறுவயதிலிருந்தே கபடி விளையாடி வருவதால் உடல் தகுதியுடன் சுலபமாக காவல்துறை பணிக்கும் ராணுவத்திற்கும் செல்கின்றனர். இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் கபடி விளையாட்டின் மூலம் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல் துறையிலும் இராணுவத்திலும் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தில் எந்த ஊரில் கபடி போட்டிகள் நடந்தாலும் ஏனாதி கிராமத்தை சேர்ந்த பூங்குளத்தான் கபடி குழுவை எதிர்நோக்கி காத்திருப்பது கபடிவிளையாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல கபடி மைதானமும் கூடத்தான். எங்கு சென்றாலும் இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கபடி போட்டியில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00