தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கபடி போட்டி - தமிழ்நாடு கபடி அணி வெற்றி வாகை சூடியது
Sep 14 2019 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கபடி போட்டியில், தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில், சர்வதேச பாடத்திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கபடி போட்டி நேற்று துவங்கியது. இதில், தமிழ்நாடு, பீகார், கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. 2 நாள் நடைபெறும் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், 19 வயதிற்குள்ளானோர் பிரிவில், பீகார் அணியை 57க்கு 49 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாடு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. 17 வயதிற்கானவர்கள் பிரிவிலும், ஓடிசா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வாகை சூடியது.