தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் : கோலி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
Sep 13 2019 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, டி-20 தொடர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி-20 போட்டிக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் தேர்வுக்குழு தலைவர் திரு.எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அதன்படி, கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மயாங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் கே.எல். ராகுலுக்கு இடமில்லை.