தென்னாஃப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிப்பு
Sep 12 2019 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. 20 ஓவர் போட்டித்தொடர் முடிந்ததும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதற்காக எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர், டெல்லியில் கூடி அணியை தேர்வு செய்கின்றனர்.
தொடக்க ஆட்டக்காரராக விளையாட லோகேஷ் ராகுலுக்கு பதில், ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. காயம் அடைந்த புவனேஷ்வர்குமார் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால், அவர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. மாற்று வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனிக்கு இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் 2-ந் தேதியும், 2-வது போட்டி புனேவில் அக்டோபர் 10-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19-ந் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளன.