ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி இன்று தொடக்கம் : போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா?
Sep 12 2019 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு ஆட்டம் டிராவான நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தற்போது முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாலும், நடப்பு சாம்பியன் என்ற வகையில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெல்லும் பட்சத்தில் இங்கிலாந்து மண்ணில் 2001ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஆஷஸ் தொடரை கைப்பற்றிய சாதனையை படைக்கும்.