கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி : பல்வேறு மாவட்டங்களிலிருந்து வீரர்கள் பங்கேற்பு
Sep 9 2019 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிண்டன் சாம்பியன் பட்டப் போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசு வழங்கி பாராட்டினார்.
கரூரில் மாநில அளவிலான 22-வது சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்பட்டப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை, சேலம், தர்மபுரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கோவையை சேர்ந்த சதீஷ்குமார் முதலிடத்தையும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த அக்ஷயா ஆறுமுகம் முதல் இடத்தையும் பெற்றனர். ஆண்கள் இரட்டையர்
பிரிவில் கணேஷ்குமார் - நவீன் ஜோடி முதலிடத்தையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ரம்யாதுளசி - தனுஸ்ரீ ஜோடி முதலிடத்தையும் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.