நியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ்: பரபரப்பான ஆட்டத்தில் நடால் வெற்றி
Sep 9 2019 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், 19 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 5-ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ்-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7-5, 6-3 என முதல் 2 செட்களை நடால் கைப்பற்றிய நிலையில், 7-5, 6-4 என அடுத்த இரு செட்களை மெத்வதேவ் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி சுற்றில் 2-1 என மெத்வதேவ் முன்னிலை பெற்றதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4 என செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். நடால் வென்ற 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.