இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: 4ம் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
Sep 9 2019 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 196 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நீண்ட நேரம் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், அந்த அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்து 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.