உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் : பி.வி. சிந்து, சாய்னா நேவால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம் - இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் அடுத்த சுற்றுக்கு தகுதி
Aug 22 2019 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கணைகள் பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சீன தைபே வீராங்கணை பாய் பூபோவை 21-14, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 21-10, 21-11 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் சொராயா தி விஷ் எஜ்பெர்கனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.