மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி : 900 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Aug 19 2019 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டியில், மாநிலம் முழுவதிலும் இருந்து 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஜூடோ கழகம், தமிழ்நாடு ஜூடோ கழகம், மருதம் விளையாட்டுக் கழகம் இணைந்து மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றன. பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மினி ஜூனியர், சப் ஜூனியர், கேடட் ஆகிய பிரிவுகளின்கீழ் 5 முதல் 16 வயதுடை மாணவ - மாணவிகள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் மாணவ - மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் ரொக்கபரிசுகள் வழங்கபடவுள்ளன. மாநில அளவிலான ஜூடோ போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள், அடுத்த மாதம் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.