இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் V.B. சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை - தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தகவல்
Aug 16 2019 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் V.B. சந்திரசேகர், தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 57.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் V.B. சந்திரசேகர்,
சென்னை மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வி.பி. சந்திரசேகர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து, தகவலின் பேரில் அங்கு வந்த மயிலாப்பூர் காவல்துறையினர், சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
V.B. சந்திரசேகர், இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்களில் பங்கேற்று, 4 ஆயிரத்து 999 ரன்கள் குவித்துள்ளார். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், காஞ்சிபுரம் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
விபி சந்திரசேகருடன் பல போட்டிகளுக்கு வர்ணனை செய்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அவரது மறைவை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், பேரதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.