கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டி - இந்தியன் வங்கி அணிக்கு சாம்பியன் பட்டம்
Aug 14 2019 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் நடைபெற்ற 55 வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி கோப்பையை கைப்பற்றியது.
கோவையில் 55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ராணுவ அணியை எதிர்த்து, இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆனையர் திரு. சுமித்சரண் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும் வழங்கினார்.