மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி : 8 அணிகள் தகுதி
Aug 13 2019 7:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தின் முடிவில், கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 14-வயதிற்கு உட்பட்ட மாணவர் மற்றும் மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன. மாநிலம் முழுவதும் நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், கோயமுத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆடவர் போட்டியில் 14 அணிகளும், மகளிர் போட்டியில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று வந்த நிலையில், திருவாரூர், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, நாமக்கல், கடலூர், நாகப்பட்டினம் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. மகளிர் பிரிவில், நீலகிரி, திருவண்ணாமலை, அரியலூர், கன்னியாகுமரி ஆகிய அணிகள் தகுதி பெற்றன.