வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் 54 அணிகள் பங்கேற்பு : வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன
Aug 12 2019 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில், 54 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதனை மறந்து வரும் சூழ்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த செம்பராய நல்லூர் கிராமத்தில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 54 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் ஒவ்வொரு அணிக்கும் நான்கு சுற்றுக்கள் வீதம் போட்டிகள் நடைபெற்றன. முதல் இடத்தைப் பிடித்த அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், சுழற்கோப்பையும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 15 ஆயிரமும், 3-ம் இடத்தைப் பிடித்த அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான 32-வது டேக்வாண்டோ போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில், சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், அரியலூர், நாகை உட்பட 26 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 526 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஜூனியர் பெண்கள் பிரிவில், சென்னை முதலிடமும், பெரம்பலூர் 2-ம் இடமும், பிடித்தன. ஜூனியர் ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி முதலிடமும், வேலூர் 2-ம் இடமும் பிடித்தன.