உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
Jul 4 2019 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டம் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
50 ஒவர்களில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் நீஷம், ஹென்றி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணியின் மார்க் வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 106 ரன்கள் குவித்த Jonny Bairstow
ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
இதனிடையே, லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 42-வது லீக் ஆட்டத்தில், அஃப்கனிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளன.