சர்வதேச குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று சாதனை : தந்தையின் குத்துச்சண்டையை நனவாக்கிய மகள்
Jun 19 2019 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி கலைவாணி சர்வதேச குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திரு. சீனிவாசன், தனது இளம் வயதில் குத்துசண்டை வீரர் ஆக வேண்டும் என விரும்பினார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அந்த கனவு நிறைவேறவில்லை. தனது கனவை தனது மகள் மூலம் சீனிவாசன் நிறைவேற்றியுள்ளார். இவரது மகள் கலைவாணி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். குத்துச்சண்டை வீரர் ஆகும் தந்தையின் கனவை நிறைவேற்றிய பெருமையில் இந்தியாவிற்கும் புகழ் சேர்த்த கலைவாணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.