ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக வரும் செய்தி தவறானது - தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து மறுப்பு

May 22 2019 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக வரும் செய்தி தவறானது என, தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர் 2 நிமிடம் 2 விநாடி 70 குறுவிநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்திருந்தார். போட்டியின்போது, அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டதில், அனபாலிக் ஸ்டெராய்ட் என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முதல்கட்ட A மாதிரி பிரிவு சோதனையாகும். இரண்டாவது கட்டமாக நடைபெறும் B மாதிரி பிரிவு சோதனையிலும் தோல்வியுற்றால் அவரது பதக்‍கம் பறிக்‍கப்படுவதோடு, 4 ஆண்டுகள் வரை போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.

ஆனால், தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை திட்டவட்டமாக கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார். தன் வாழ்நாளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதேயில்லை என்றும் கூறினார். ஆசிய தடகளப் போட்டியின்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன் என்று கூறிய அவர், ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறானது என குறிப்பிட்டுள்ளார். பயிற்சிக்காக போலந்து செல்வதிலும் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00