இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டி - விராட்கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் புறப்பட்டது

May 22 2019 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இன்று இங்கிலாந்துக்கு பயணமானது.

உலகக் கோப்பை கிரிக்‍கெட் திருவிழா, வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டிஸ், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 முன்னணி அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஏற்கெனவே பெரும்பாலான அணிகள் இங்கிலாந்து சென்றடைந்துள்ள நிலையில், விராத்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி, இன்று மும்பையில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்‍கு புறப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த கேப்டன் விராத்கோலி, முந்தைய போட்டிகளை விட இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவாலானது என்று கூறினார். கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அதனை அர்ப்பணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. அதற்கு முன்னதாக வரும் 25-ம் தேதி நியூசிலாந்துடனும், 28-ம் தேதி பங்களாதேஷ் அணியுடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00