ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர் சென்னையில் சாலை விபத்தில் பலி
May 15 2019 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக நீச்சல் வீரர், சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.
சென்னை செனாய் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற நீச்சல் வீரர், கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் பணிபுரிந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார். நேற்று இரவு அரும்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரி மோதி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் சுப்பிரமணி என்பவரை கைது செய்துள்ளனர்.