சிறப்பு திறன் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் : நடிகை வரலட்சுமி பேட்டி
May 3 2019 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறப்பு திறன் கொண்ட வீரர்களுக்கு, விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், சிறப்பு திறன் வீரர்களின் கால்பந்தாட்ட போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய சிறப்பு ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் திரு.அமர் பிரசாத், சர்வதேச அளவிலான சிறப்பு திறன் வீரர்களுக்குகான கால்பந்தாட்ட போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.