உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு
Apr 15 2019 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குறித்த பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI இன்று அறிவித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான அணியில், எம்.எஸ். தோனி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சஹால், முகம்மது சமி மற்றும் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.