தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் சென்னையில் தத்தெடுக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்
Feb 26 2019 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம், சென்னையில் தத்தெடுக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் 75 மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தைகள் கலந்துக்கொண்டனர். மூளை வளர்ச்சிக் குன்றிய இச்சிறப்பு குழந்தைகள் 20 வகையான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், பெரும்பாலான சிறப்பு குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டம் மூலமாக தத்தெடுக்கப்பட்டவர்கள்.மற்ற குழந்தைகள் போலவே இச்சிறப்பு குழந்தைகளும் வாழ்வில் சாதிக்க முடியும் என்பதை இப்போட்டி மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.