நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Feb 8 2019 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துடனான 2-வது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா அதிக பட்சமாக 50 ரன்கள் எடுத்தார். தொடரை முடிவு செய்யும் கடைசி போட்டி, ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.