நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
Jan 28 2019 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது போட்டி, மவுண்ட் மான்கனூய் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளையாடிய அந்த அணி, 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஸ் டெய்லர் அதிக பட்சமாக 93 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஷமி மூன்று விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாகல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி 60 ரன்களும், ரோகித் சர்மா 62 ரன்களும் எடுத்து அரைசதம் கடந்தனர். ராயுடு, 40 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.