ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
Jan 16 2019 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் ஷான் மார்ஷ், சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய கிளன் மேக்ஸ் வெல்லும் வேகமாக ரன்களைச் சேர்த்ததால், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா, 9 விக்கெட்டுகளுக்கு 298 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 299 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய இந்திய வீரர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் 32 ரன்களும், ரோகித் ஷர்மா 43 ரன்களும், ராயுடு 24 ரன்களும், கோலி 104 ரன்களும், தோனி 55 ரன்களும், தினேஷ் கார்த்திக் 25 ரன்களும் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். 49 புள்ளி 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 299 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.