திருப்பூரில் நடைப்பெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி : உடுமலையைச் சேர்ந்த பிரதிப் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்
Dec 10 2018 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைப்பெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், உடுமலையை சேர்ந்த பிரதிப் என்பவர், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பீம் பீட்ணஸ் உடற்பயிற்சி கூடம் சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைப்பெற்றது. இதில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இருநூறுக்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 55, 60 மற்றும் 85 கிலோ எடை என 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்த வீரர்கள், பல்வேறு கோணங்களில் தங்களை திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதில், ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற உடுமலையை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு தங்க நாணயம், சுழற் கோப்பை மற்றும் வண்ணக் தொலைக்காட்சி பெட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டன.