இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் திறமையை வெளிநாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டது தொடர்பான விமர்சனம் - இந்தியாவை நேசிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற கோலியின் கருத்தால் பெரும் சர்ச்சை
Nov 8 2018 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியை, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்த விவகாரத்தில், இந்தியாவை நேசிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என கோலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, சர்வதேச அளவிலும் மிகச்சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அவரது பேட்டிங் திறமை ஒன்றும் அந்த அளவுக்கு சிறப்பானது அல்ல என்றும், அவரது திறமை மிகைப்படுத்தப்படுவதாகவும் சமூக வளைதங்களில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் விராட் கோலி பேசும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. தனது பேட்டிங்கை விரும்பவில்லை என்பது பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், இதுபோன்ற விமர்சனங்களை கூறுபவர்கள், ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். வெளிநாடுகளை நேசிப்பவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.