வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா அபார வெற்றி - 3- க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தல்
Nov 2 2018 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, 3க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின், கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் அந்த அணி 32வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
105 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15-வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 56 பந்துகளில் 63 ரன்களுடனும், கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாகவும், கேப்டன் விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.