வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி- 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Oct 30 2018 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, அம்பதி ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் ஸ்கோர் 11 புள்ளி 5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, 16 ரன்கள் மட்டுமே எடுத்து, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோகித் ஷர்மா சதம் விளாசி, 162 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அம்பதி ராயுடு 100 ரன்கள் எடுத்து ஆட்டத்திற்கு வலு சேர்த்தார். 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 377 ரன்கள் குவித்தது.
378 ரன் என்ற கடின இலக்காக கொண்டு அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
வரும் 1-ம் தேதி திருவனந்தபுரத்தில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.