பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் குற்றச்சாட்டு - பதவி நீக்கம் செய்ய கோவா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட கிரிக்கெட் சங்கங்கள் வலியுறுத்தல்
Oct 26 2018 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோவா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட கிரிக்கெட் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல பத்திரிக்கையாளர் ஹர்னித் கவுர், தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் ஜோஹ்ரியால் பாலியல் துன்புறுத்தலை சந்தித்த பெண் குறித்த கட்டுரையை பகிர்ந்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண், ராகுல் ஜோஹ்ரியுடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ராகுல் ஜோஹ்ரி, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு உத்தரவிட்டது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல் ஜோஹ்ரியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, கோவா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் பி.சி.சி.ஐ நிர்வாகக்குழுவுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், ராகுல் ஜோஹ்ரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.