வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் தோனியையும், காம்பீரையும் களமிறக்க திட்டம் - காங்கிரசை சமாளிக்க பாரதிய ஜனதா வியூகம்
Oct 24 2018 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில், கிரிக்கெட் வீரர்கள் தோனியும், காம்பீரும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனியும், கொளதம் காம்பீரும் தங்களது மாநிலம் மட்டுமன்றி நாடு முழுவதும் பிரபலமாக இருப்பதுடன், மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். இவர்கள் இருவரையும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த பாரதிய ஜனதா முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர் பா.ஜ.க.-வில் உள்ள நிலையில், தோனியும், காம்பீரும், அக்கட்சியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டியிட வைக்கவும், காம்பீரை டெல்லியில் போட்டியிட வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.