நாகர்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி : கேரள அணி முதலிடம்
Oct 22 2018 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், கேரள மாநில அணி முதலிடம் பிடித்தது.
இந்திய சோட்டோகான் கராத்தே - டூ - சமேளனம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, ஹரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் இறுதிபோட்டியில், கேரளா மாநிலம் முதல் இடத்தையும், டெல்லி இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். போட்டிகளில் தங்க பதக்கம் பெற்ற 64 வீரர் - வீராங்கனைகள், டிசம்பர் மாதம் 17 -ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்யட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஹாக்கி அகாடமி மற்றும் தியாககேசர் ஆலை பள்ளி ஹாக்கி முன்னாள் மாணவர்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 அணிகள் இதில் கலந்துகொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஈஷா யோகா பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற வட்ட அளவிலான வாலிபால் போட்டியில், ஏலூர், செல்லம்ப்பம்பட்டி, பழைய பாளையம், வளையப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியில் முதல் 4 இடத்தை பிடித்த அணிகள்,
ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ளது.
பெரம்பலூர் அருகே பாடாலூரில் குறு வட்ட அளவிலான வாலிபால்
விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பாடாலூர், கொளக்காந்தம், இரூர், கீழமாத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 18 க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இதில் பெற்ற வீரர்கள், வரும் டிசம்பர் 9-ந் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர்.