இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டி : இந்திய அணியிலிருந்து முரளி விஜய் அதிரடியாக நீக்கம்
Aug 23 2018 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்ததால் வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது. இதனால் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த், ஷமி, உமேஷ், தாகூர், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், விஹாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.