வாள் சண்டையில் தேசிய அளவில் பதக்கம் வென்ற நெல்லை மாணவிகள் : மாவட்ட ஆட்சியரிடம் உதவித்தொகை கேட்டு மனு
Aug 14 2018 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாள் சண்டையில், தேசிய அளவில் பதக்கம் வென்ற நெல்லை மாணவிகள், உதவித்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், பாளைங்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளான வெள்ளத்தாய் மற்றும் அபிராமி ஆகியோர் மாநில மற்றும் தேசிய அளவிலான வாள் சண்டையில் தங்கப் பதக்கம் பெற்று நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால், இரு மாணவிகளும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவரானதால், தங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை இயலவில்லை. இந்நிலையில், தங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரங்கணங்களை வாங்க உதவி செய்யுமாறு இரு மாணவிகளும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.