அம்பு எய்தலில் சென்னை மாணவன் ஆசிய சாதனை : ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என பேட்டி
Aug 13 2018 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை சேர்ந்த 9 வயது மாணவன், இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளான்.
சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் சமரன் சர்வேஷ், சிறு வயது முதலே அம்பு எய்தல் பயிற்சி மேற்கொண்டு வருகிறான். இந்நிலையில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள பல்கலைகழக உள்விளையாட்டு அரங்கில், கண்களை கட்டிய நிலையில் 10 மீட்டர் தூரம் அம்பு எய்தும், கண்களை திறந்தபடி 70 மீட்டர் தூரம் அம்பு எய்தும், ஏசியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு என ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைத்துள்ளான்.
இரண்டு சாதனைகளை படைத்த சிறுவன் சமரன் சர்வேஷ்க்கு, இந்தியா புக் ஆப் ரெக்காடின் நடுவர் பிஸ்வதீப் ராய் சௌத்ரி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த சாதனைகளை தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என சமரன் சர்வேஷ் தெரிவித்துள்ளான்.