புதுச்சேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி : வெற்றிபெற்ற அணிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோப்பை - ரொக்கப்பரிசுகள்
Jul 16 2018 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அருகேயுள்ள குருவிநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் மகிழினி விளையாட்டுக் கழகமும் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்தின. 2 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், புதுச்சேரி முழுவதிலும் இருந்து 50 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இருளன்சந்தை நியூ ஸ்டார் அணியும், சோரியங்குப்பம் மகிழினி அணியும் மோதின. இதில் இருளன்சந்தை நியூ ஸ்டார் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. வேல்முருகன் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.